×

இரும்பு கடையில் திருடியவர் கைது

 

களக்காடு,ஏப்.22: களக்காடு அருகே உள்ள மாவடி, கீழத்தெருவை சேர்ந்தவர் காசிமணி மகன் ஜான்சன் (43). இவர் மலையடிபுதூர் ஊருக்கு அருகே பழைய இரும்பு பொருட்கள் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 15ம் தேதி இரவில் ஜான்சன் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். இரவில் மர்ம நபர் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, ரூ.7ஆயிரம் மதிப்பிலான இரும்பு கம்பிகள் மற்றும் செம்பு கம்பிகளை திருடி சென்று விட்டார். மறுநாள் காலையில் கடைக்கு வந்த ஜான்சன் கடை உடைக்கப்பட்டு, கம்பிகள் திருடப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து அவர் திருக்குறுங்குடி போலீசில் அளித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுபாஷினி வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினார். இதில் கடையில் திருடியது மேலமாவடி, நாராயணசுவாமி கோயில் தெருவை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் ஜெயசெல்வன் (30) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவர் லாரியில் மறைத்து வைத்திருந்த, திருடப்பட்ட கம்பிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

The post இரும்பு கடையில் திருடியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Kalakadu ,Johnson ,Kasimani ,Keezatheru, Mavadi ,Malayadiputur ,Iron Shop ,
× RELATED களக்காடு புலிகள் காப்பகத்தில் வரையாடுகள் கணக்கெடுப்பு பணிகள்